அன்புடையீர், வணக்கம், ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு – 97-ஆவது நிகழ்ச்சி, வருகின்ற 08-02-2026 ஞாயிறு மாலை 06-30 மணிக்கு நடைபெறவுள்ளது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு பி. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், இளநிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் சே.கரும்பாயிரம் அவர்கள் வேளாண் சடங்குகளும் நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். தாங்கள் அனைவரும் நம் மண்ணின் மரபு அறிய தவறாது இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.