2031 – ம் ஆண்டு திருவள்ளூர் கோட்டத்தை லஞ்சம் இல்லாத திருவள்ளூர் கோட்டமாக மாற்ற கும்மிடிப்பூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் வட்டம், பூந்தமல்லி வட்டம், ஆவடி வட்டம் மற்றும் மாதவரம் வட்டம் ஆகிய ஆறு வட்டத்தை உள்ளடக்கிய திருவள்ளூர் கோட்டத்தில் உள்ள ஆறு வட்ட ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்து அந்த வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ஒவ்வொரு வட்டத்திலும் 2500 வீட்டுக்கு ஒரு பகுதி ஒருங்கிணைப்பாளர் என தலா 25 பகுதி ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்து அந்த பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சீட்டாவின் சிறப்பு பயிற்சி கொடுத்து பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் 100 வீட்டுக்கு ஒரு மாதிரி மக்கள் பாராளுமன்றம் என 25 மாதிரி மக்கள் பாராளுமன்றம் ஒவ்வொரு பகுதியிலும் மூன்று மாதத்துக்குள் அமைத்து அதில் மூன்று வீட்டுக்கு ஒருவர் வீதம் 33 நிர்வாகிகள் தேர்வு செய்து அவர்களை மாதந்தோறும் கூட்டம் கூட்டி மக்களுக்கான அவசர அத்தியாவசிய. தேவைக்கு தக்க விழிப்புணர்வு பயற்சி வழங்கி லஞ்சம் இல்லாத பகுதிகளை உருவாக்கி அவ்வாறு ஆறு வட்டத்திலும் உள்ள 150 பகுதி ஒருங்கிணைப்பாளர்களும் விழிப்புணர்வு பயற்சி வழங்கி 2031 ஆம் ஆண்டுக்குள்ளாக திருவள்ளூர் கோட்டத்தை லஞ்சம் இல்லாத திருவள்ளூர் கோட்டமாக மாற்றிட திருவள்ளூர் கோட்டத்தின் லஞ்ச விழிப்புணர்வு பயிற்சியாளராக சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் கீழ் உள்ள அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் திருவள்ளூர் கோட்ட ஒருங்கிணைப்பாளராக சமூக ஆர்வலர் K ரவிச்சந்திரன் அவர்களை சீட்டாவின் நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு நியமித்து உள்ளார்
