
கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பொறிக்கப்பட்ட கொடியை முன்னாள் தலைவர் ஜெயலலிதா தோழி சசிகலா அறிமுகம் செய்தார்…!!

கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் பொறிக்கப்பட்ட கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.
புதிய கட்சி ஆரம்பிக்கிறேன்”
- “அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன்.
- 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது”
- கமுதி கூட்டத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வி.கே.சசிகலா பேசினார்.
கட்சியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், வி.கே.சசிகலா தனது புதிய கட்சியின் கொடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவங்களும் பொறிக்கப்பட்ட அந்த வண்ணமயமான கொடியை ஏற்றி வைத்த அவர், “ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகளுக்கான களம் இது” எனத் தொண்டர்களிடையே முழக்கமிட்டார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டம் மற்றும் கொடி அறிமுகம், தமிழக அரசியலில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்கப்போர் நாளிதழ்
