
சிறுவயதிலிருந்தே கஷ்டங்களை சந்தித்து, என் சொந்த உழைப்பால் முன்னேறியவன் நான்…!
மற்றவர்கள் நிம்மதியாக தூங்கிய இரவுகளில்,
எனக்கான அடையாளத்தை தேடி
தூக்கமின்றி போராடிய நாட்கள் ஏராளம்…!
யாரையும் ஏமாற்றி வாழும் வழி எனக்குத் தெரியாது…
வியர்வை சிந்தி சம்பாதித்த
ஒவ்வொரு காசின் பின்னாலும்
என் நேர்மையும் உழைப்பும் இருக்கிறது…!
எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த எனக்கு
சுயமரியாதை தான் மிக முக்கியம்…!
யாரிடமும் கையேந்தி வாழ வேண்டிய அவசியம் இல்லை…!!
என் உழைப்பும் என் தன்மானமும்
என்னை ஒருபோதும் கைவிடாது…!
இன்று நான் கஷ்டப்பட்டாலும்,
நாளை என் உழைப்பு என்னை உயர்த்தும்…!
என்றும் அன்புடன்,
உங்கள் சிநேகிதன்,
முனைவர் ஜெ. மகேந்திரன்.

