விஜய் ஜெயிச்சாச்சு…!! தொங்கு சட்டசபை…!! அடுத்து என்ன நடக்கும்? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காமல் போனால்..

இதை அரசியல் சட்ட ரீதியாக “தொங்கு சட்டமன்றம்” என்று அழைப்பார்கள்…

​யாரும் யாருக்கும் ஆதரவு அளிக்காத பட்சத்தில், சட்டம் மற்றும் மரபுகளின்படி பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படும்…

ஆளுநரின் அழைப்பு
​மாநிலத்தின் அரசியல் சட்டத் தலைவர் என்ற முறையில் ஆளுநர் முடிவெடுப்பார்…

வழக்கமாக ஆளுநர் பின்வரும் வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..

முதலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை (இங்கே தவெக – 105) ஆட்சி அமைக்க அழைப்பார்…

​அவர்கள் ஆட்சி அமைக்கத் தயார் என்றால், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (வழக்கமாக 15 நாட்கள்) சட்டமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டும்…

ஒருவேளை ​எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், தவெக அரசு அமைக்க முன்வந்தால் அது ‘சிறுபான்மை அரசு’ ஆகச் செயல்படும்…

​வாக்கெடுப்பின் போது மற்ற கட்சிகள் (திமுக, அதிமுக) வெளிநடப்பு செய்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தாலோ அவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை கிடைத்தால் ஆட்சி தப்பிக்கும்…

​ஆனால், முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும்…

அவர்கள் எதிர்த்து வாக்களித்தால் ஆட்சி கவிழும்…

​ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் இல்லாதபோது, மற்ற கட்சி உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கலாம்..

ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 2/3 பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்கள் பதவி தப்பும்…

ஒருவர் இருவராகச் சென்றால் அவர்களின் பதவி பறிபோகும்…

​யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை, எந்தக் கட்சியும் ஆதரவு தர முன்வரவில்லை, ஆளுநரின் அழைப்பையும் யாரும் ஏற்கவில்லை என்றால், அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவார்…

​மாநிலத்தில் சட்ட ரீதியான ஆட்சி அமைய வாய்ப்பில்லை எனத் தெரிந்தால், சட்டமன்றம் முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்…

​குடியரசுத் தலைவர் ஆட்சியின் போதும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்றால், வேறு வழியின்றி சட்டமன்றம் கலைக்கப்பட்டு, 6 மாத காலத்திற்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்படும்…

சுருங்க சொன்னால், யாரும் ஆதரவு தராத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு தருவார்…

அவர்களாலும் சபை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது மறுதேர்தல் என்பதே சட்டப்பூர்வமான இறுதிக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்…

நாடு உடனே இன்னொரு தேர்தலை தாங்காது…

இப்போது தமிழ்நாட்டில் அப்படி நடக்க வாய்ப்பில்லை, காங்கிரஸ், பரமக, அமமுக தேமுதிக ஆதரவு அளித்தால் தவெக ஆட்சியை தக்க வைக்கும்…
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பகிரப்படும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top