


சட்டம் படித்து உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞர் ஆக பதிவு செய்தார், பேரறிவாளன்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையிருந்த பேரறிவாளன், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலையானார். தற்போது பேரறிவாளன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்!
பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.
இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார். சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார்.
எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
HighCourt # T.N
