ஏதோ ஒன்றைகவிதை போலவேநிறைய எழுதி விடுகிறேன்..!! பொள்ளாச்சி கவிஞர் முருகானந்தம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஏதோ ஒன்றை
கவிதை போலவே
நிறைய எழுதி விடுகிறேன்

எந்த சூட்சுமமும் தெரியாதவர்கள்
எந்த ரகசியமும் தெரியாதவர்கள்
ஏதோ கொஞ்சம் பேர்
அதை கவிதை போலவே
வாசித்தும் விடுகிறார்கள்

ஒரு பறவையை எழுதுகிறேன்
பறவைகளெனவே
வாசித்து விடுகிறார்கள்

ஒரு பூவை எழுதுகிறேன்
பூக்களெனவே வாசித்து விடுகிறார்கள்

ஆனால்
அந்தப் பறவை பறக்கத் தொடங்கிய
அந்த முதல் நொடியைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்…….

அந்தப்பூ மலரத் தொடங்கிய
அந்த முதல் நொடியைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்……

நான் தேடி முடிப்பதற்குள்
அவர்கள் கவிதையென வாசித்து
முடித்து விடுகிறார்கள்

இப்படித்தான்
நானும் அவர்களும் இந்த கவிதையும்
இந்த பிரபஞ்சத்தில்
தினம் தினம் ஏதோ ஒன்றை
பிரசவித்துக் கொண்டேயிருக்கிறோம்….

  • கவிஞர்
  • பொள்ளாச்சி முருகானந்தம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top