கரூரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்தும், குண்டர்களை கைது செய்யக் கோரியும் வடலூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்…!! செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,

கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஏற்ற வேண்டும் எனவும், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், பத்திரிக்கையாளர்களை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் மாநில துணைப் பொதுசெயலாளர் ஆர்.கே. முருகன் கண்டன உரை நிகழ்த்தினர்,

இந்நிகழ்ச்சியை வீர.சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் கே.டி.சேகர், செந்தில், நந்தா ஆறுமுகம், சீனிவாசன், நெய்வேலி தேவராஜ், இளையபிரபு,நியூஸ் தமிழ் நிருபர் மணிகண்டன் கேப்டன் டிவி தனூஷ், உள்ளாட்சி அரசு சக்திவேல்,
உள்ளாட்சி சாரல் ஷேக் நூர்தீன்,தமிழன் டிவி சின்னசாமி, உள்ளாட்சி முரசு பிரியா தமிழ், ஆதி.அன்பு, விமல்ராஜ் புவனகிரி லதன், தந்தி டிவி அகிலன் நியூஸ் தமிழ் வினோத்குமார்….

மற்றும் நிர்வாகிகள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினர்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ் Akkappore. News சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)