
பஹ்ரைன் காட்டிய அதிரடி!
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் நீரிணைகுறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் தனது கடு*மையான நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது உரையாற்றிய பஹ்ரைன் வெளி விவகார அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி,
“சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த நீர்வழியை மூடுவதற்கு ஈரான் குடியரசிற்கு எந்த உரிமையும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.