
ஹிரோஷிமா நினைவு தினத்தில் துபாய் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதலை நிறுத்த ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்…!! இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் சிவக்குமார் கோரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 6, 2026
81 ஆண்டுகளுக்கு முன்பு 1945_ இல் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதை நினைவு கூறவும், பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கவும், அமைதி மற்றும் அணு ஆயுத குறைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 இன்று அனுசரிக்கப்படுகிறது.
அணுகுண்டு பாதிப்பால் பலியான பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீரவணக்கம்!
பேரழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை குறைக்கவும்,
உலகில் மக்கள் அமைதியுடன் வாழ ஐநா சபை நடவடிக்கை மேற்கொள்ளவும் உறுதி ஏற்போம்!
ஹிரோஷிமா நினைவு தினத்தில் துபாய் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதலை உடனடியாக நிறுத்த ஐநா சபை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்…!!!
🙏🏻🌹🇮🇳
டாக்டர் மா. சிவக்குமார்,
தலைவர்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம்,
தொண்டாமுத்தூர்,
கோவை
