தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சியில் வீட்டு வரி, ஜல் ஜீவன் குடி தண்ணீர் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்..!! மக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜனவரி 3 ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்…!! சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! அக்கப்போர் இணைய நாளிதழ், செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சியில் வீட்டு வரியில் நடை பெற்ற ஊழல், ஜல் ஜீவன் குடி தண்ணிர் திட்ட ஊழல், 100 நாள் வேலை திட்ட ஊழல் மற்றும் ஊழல் குறித்த பொதுமக்கள் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

கால தாமதப்படுத்தும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையை கண்டித்து 2026 ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி (3-1-2026) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சீட்டா அறிவித்துள்ளது.

சீட்டா நிறுவனரும் சீட்டா சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மனும், தூத்துக்குடி மாவட்டத்தை லஞ்சம் இல்லாத மாவட்டமாக்கும் சீட்டா தனி சிறப்புக்குழு தலைவருமான லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அக்கப்போர் இணைய நாளிதழ், செய்திப்பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed