

மனிதநேய இலக்கியவாதி அண்ணன் உதயம் ராம்…!! அக்கப்போர் நாளிதழ் செய்தி ஆசிரியர் நாகை மணி வண்ணன் புகழாரம்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மனித நேயத்தின் மனிதர்…உரத்த சிந்தனையின் – உதயம் ராம்
உரத்த சிந்தனை விதைத்தவர்.
உண்மை விதைகளைப் பரப்பியவர் நீ!இளைஞர்களின் ஊக்கக்குரல்…
தொடர் முயற்சி…!!
வார்த்தைகளில் விழிப்புணர்வு விதைத்து,
வாழ்வில் மாற்றத்தின் தீபம் ஏற்றியவர்… !
அரட்டை அரங்கம் மேடையெங்கும்,
அறிவின் ஒளியைப் பரப்பிய குரல் நீ..!
இளைஞர் உள்ளங்களில் நம்பிக்கை விதைத்து,
இனிய தமிழின் பெருமை கூறியவர் நீ…!
எழுத்திலும் உயரம், பேச்சிலும் ஒளி,
எளிமையிலே உயர்ந்த மனித நேயம்!
சமூகத்தின் சிந்தனையைச் செம்மைப்படுத்தும்,
சான்றோர் வரிசையில் நிலைக்கும் பெயர்!
உதயம் என்ற பெயர்போல் என்றும்
உலகம் போற்றும் ஒளியாக விளங்குங்கள்;
உரத்த சிந்தனையின் இலட்சியப் பாதையில்
எங்கள் பயணம் வெற்றியுடன் தொடரட்டும்!
✒️
நா.மணிவண்ணன்
புதிய நாளிதழ்
கல்விடுடே
மோட்டார் டுடே
அக்னிப்புரட்சி
Akkappore.News
News editor
SpotlightTamilnadu©️®️
………………………….
பத்திரிக்கையாளர் உதயம் ராம் பேசுகிறார்:
. நானா ?
பேசியது
நானா ?
2018ல் ராஜ் வெப் டிவியில் வந்த இந்த வீடியோ லிங்கை வேதாரண்யத்தில் உள்ள புதிய நாளிதழ் இதழின் ஆசிரியர் நா மணிவண்ணன் அனுப்பியிருந்தார்.
உரத்த சிந்தனையின் கடந்து வந்த பாதையை நான் திரும்பிப் பார்க்கிறேன்.
நீங்கள் நேராய் பாருங்கள்



