இந்திய மருத்துவர் சங்க கருத்தரங்கம்!

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் நோயாளிகள் உறவுகள் குறித்து கருத்தரங்கம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை

மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆர்.செல்வ குமார் தலைமையில் டாக்டர் டி.பி.டி சத்தியகுமார், டாக்டர். செல்லமாரியப்பன் முன்னிலையில்நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் கி.மணிவாசகம், ஏ.முருகன், முகவை க.சிவகுமார் ஆகியோருக்கு ஐ.எம்.ஏ சார்பில் சால்வை மற்றும் நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஐ.எம்.ஏ நிர்வாகிகள் டாக்டர் பி.நெல்லையப்பர், டாக்டர் பாலகிருஷ்ணன்,

டாக்டர் மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர். பத்திரிகையாளர் சார்பில் தினபூமி தலைமை நிருபர் கி மணிவாசகம் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து கூறினார்.
03.07.2023

