

கவிஞர் செங்கதிர் வாணனுக்கு “மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்” விருது…!! வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கிறது… அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சென்னை காட்டுப் பாக்கம் A.K. மஹால் அரங்கில் 19-7-26 விருது (ஞாயிறு) மாலை கவியரசு கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் M.S விஸ்வநாதன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் செங்கதிர் வாணனுக்கு “மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கவிஞர் செங்கதிர் வாணன் – இதுவரை பூச்சி, கடற்கரை, என்றுமே ஆனந்தம், காவாளி, முரட்டுக்கைதி, காக்கிச்சட்டை காஞ்சனா ஆகிய திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

வெளிவர இருப்பவை: லடக்கு வாசல், டக்கர், சூரியனும் சூரியகாந்தியும், வரம்பு, லக்கா மாட்டிக்கிச்சு, எவன்டா இந்த வேலைய பார்த்தது… நா அப்படியே ஷாக் ஆயிட்டேன், பாசக்கார பய.
இவை தலிர … பல நூறு பக்திப் பாடல்கள்/ தனிப்பாடல்கள்/ மெல்லிசைப் பாடல்கள் எழுதி குவித்து கொண்டே இருக்கிறார், கவிஞர் செங்கதிர் வாணன்.
விருது பெற்ற அவருக்கும், மெல்லிசை மன்னர் M.S விஸ்வநாதன் விருது வழங்கிய குழுவினருக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் அக்கப்போர் நாளிதழ் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கிறது.
ஆர்.கே.விக்கிரம பூபதி M.A.MPhil
முதன்மை தலைமை செய்தி ஆசிரியர், செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்




