
மும்பை, இந்தியப் பேனா நண்பர் பேரவை மகளிரணி சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், மும்பை மாநகராட்சி தமிழ்ப்பள்ளி பொறுப்பு ஆசிரியை திருமதி. அனிதா டேவிட் அவர்களுக்கு மகளிர் தின சிறப்பு விருதை பேரவைத் தலைவர் மா. கருண் வழங்கினார்.
விழாவில் 11 ஏழைப் பெண்களுக்கு மளிகைக் பொருள்கள் அடங்கிய பொதிப்பை வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ. செல்லத்தம்பி, அறங்காவலர் திருமதி பா. மலர்விழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செ. பாஸ்கர், சாம் மோசஸ் குணசேகர், மும்பை பேரவை உறவுகள், பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ம.செல்வராஜ், கோலிவாடா துரை மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


