சங்கீதா கோர்ட்டுக்கு போயிருக்க கூடாது..! இந்த நேரம் விஜய் கைதாகியிருப்பார்…! நடிகர், இயக்குனர் எஸ்.வி.சேகர் தடாலடி கருத்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சங்கீதா கோர்ட்டுக்கு போயிருக்க கூடாது..! இந்த நேரம் விஜய் கைதாகியிருப்பார்…! நடிகர், இயக்குனர் எஸ்.வி.சேகர் தடாலடி கருத்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்பதை சங்கீதா, கோர்ட்டில் கேட்டிருக்கக் கூடாது, போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தால், விஜய் கைது செய்யப்பட்டிருப்பார் என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியல் மேடைகளில் விஜய் பேசும் போது, எல்லார் வீடுகளிலும் விஜய் இருக்கிறார், நான் உங்கள் வீட்டு பிள்ளை என்பதை போல்தான் அவர் பேசி வருகிறார். தமிழக மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்கிறேன் என்கிறார்.

அப்படிப்பட்ட ஒருத்தர் மனைவியையே விவாகரத்து செய்யும் நிலை உள்ளது. அதிலும் விவாகரத்து செய்வதற்கான காரணத்தை பார்த்தால், விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது என அவரது மனைவியே விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு யார் வேண்டுமானாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இப்படி மனைவி இருக்கும் போதே இன்னொரு நடிகையுடன் தொடர்பு என்பது தனிமனித ஒழுக்கமில்லாத செயல். இப்படிப்பட்ட இவர் எப்படி ஒரு சமூகத்தையும் கட்சியையும் வழிநடத்த முடியும்? என்கிற கேள்வி எழுகிறது.

தந்தை அறிவுரை கூறியும் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது நான் என்ன வேண்டுமானாலும் திமிர்த்தனம் செய்வேன் என்கிற மனோபாவம்தான் விஜய்யிடம் தெரிகிறது. சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட போது விஜய் பெரிய நடிகர் எல்லாம் இல்லை. இத்தனை வசதி கிடையாது.

அவரை திருமணம் செய்ததும்தான் இந்த வசதி வாய்ப்பு ஏற்பட்டது. வயது வந்த மகனும் மகளும் இருக்கும்பட்சத்தில் இதை எப்படி சுமூகமாக கையாள்வது என்பதே விஜய்க்கு தெரியவில்லை என்றால் தமிழகத்தின் பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பார்?

விவசாய பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினையை தீர்த்துவைப்பதாக விஜய் சொல்கிறார். ஆனால் சொந்த வீட்டு பிரச்சினையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. சங்கீதாவை கோபப்படுத்துவதற்காக குறிப்பிட்ட அந்த நடிகையுடன் அதே நிறத்தில் உடை அணிந்து கொண்டு விஜய் பொது இடத்திற்கு சென்றுள்ளார் என்றால் சமுதாயத்தில் தனது பெயர் எத்தனை அசிங்கப்படும் என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்.

திருமண விழாவில் நடிகையுடன் விஜய் கலந்து கொண்டது சங்கீதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். இதற்கு வேறு ஒருவர் வந்து மருந்து தடவ முடியாது. விவாகரத்து ஆகும் வரை, விவாகரத்துக்கு பிறகு என்ன ஜீவனாம்சம் என நீதிமன்றம் சொல்லும் வரை சங்கீதாவுக்கு தேவையானவற்றை விஜய்தான் தார்மீக பொறுப்பேற்று செய்து கொடுக்க வேண்டும்.

சங்கீதா இந்த கேஸை கோர்ட்டில் கொடுக்காமல், வன்கொடுமை சட்டத்தின் கீழ் இருக்க இடம் கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். விஜய்யை கைது செய்ய கூட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

கரூரில் 41 பேர் இறந்த போது கூட முதல்வர் ஸ்டாலினின் பெருந்தன்மையால் விஜய்யை கைது செய்யவில்லை. தேவையில்லாமல் அரசியலில் விஜய்க்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்துட கூடாது. தற்போது அவர் நடந்து கொள்வதை பார்த்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது. இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top