மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு மதுரை போலீஸ் உற்சாக வரவேற்பு…!!
உதவி ஆசிரியர் G.H.குமார், B.com, செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மதுரை: வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மதுரைக்கு வருகை தந்தனர். நேற்று இரவு ரயில் மூலம் மதுரை கூடல் நகர் ரயில் நிலையம் வந்தடைந்த CRPF வீரர்களுக்கு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளர் டி. மோகன் குமார் (Tr.D. Mohan Kumar) தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பூங்கொத்து வழங்கி மரியாதையுடன் வரவேற்றனர்.

மேலும் அவர்களுக்கு அன்பான மற்றும் உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் வகையில் சிஆர்பிஎப் வீரர்கள் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உதவி ஆசிரியர் G.H.குமார், B.com, செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed