தவமிருந்து பெற்ற வரம்

என் வீட்டில்
வீசும் காற்றில்
விசு வாசம் மணக்கிறது

என் பேச்சில்
என்றும் உன்
அரட்டை அரங்கம் தொடர்கிறதுஎன் நாசி எப்போதும்
உன்னையே சுவாசிக்கிறது

என் உயிரணு ஒவ்வொன்றும் உன்னையே
ஆராதிக்கின்றது.

எனக்காக பிறக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
உன் நினைவும்
உடன்பிறப்பது
நான் தவமிருந்து பெற்ற அதிசய ஆனந்த வரம் !

உன் வாழ்க்கை
எனது பாதையாகட்டும்!
உன் வாழ்த்து
என்னை வாழ வைக்கட்டும்!

ஆறாம் ஆண்டில்
ஆறாத வலியுடன்

  • உதயம் ராம்
  • 22.03.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed